*வாசிப்பை நேசிப்போம்* *வேல இராமமூர்த்தியின் பட்டத்து யானை* ஊரடங்கு நாளில் உலக புத்தக தினத்திற்கு பிறகு படித்த முதல் நாவல்.ஏற்கெனவே இவர் எழுதிய குற்றப் பரம்பரையை இரண்டு முறை வாசித்ததால் இப்புத்தகமும் இரண்டாம் முறை வாசிக்கப்பட்டது.. இராமநாதபுரம் மாவட்டத்தில் பெருநாழி கிராமத்தில் செல்லையா- இருளாயி தம்பதியர் மகனாகப் பிறந்த இரணசிங்கம் நாவலின் கதாநாயகன்.. கதையாசிரியர் கதையை இருகூறாகப்பிரித்து கதையை சொல்லிக் செல்கிறார். தற்போதைய இரணசிங்கம் அவனுடைய விடுதலை வேள்வி போர்த்திறம் சாதாரண படிப்பறிவில்லாத கிராமத்தின் வாலிபர்களை கும்பினி படையை எதிர்த்து போரிட பயிற்றுவிக்கும் முறை.. எதிரிகள் தாக்கி வீரர்கள் இறந்தால் மனம் தளராது போராடும் திறம், கம்பெனியாரின் காவல்நிலையத்தில் ( கச்சேரி) புகுந்து இராணுவ தளவாடங்கள், துப்பாக்கிகளை கைப்பற்றி இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து சுதந்திர போராட்ட வீரர்களாக மாற்றுவது போராடுவது என ஒரு நிகழ்கால நிகழ்வாகும், எப்படி இது போன்ற சுதந்திர வேட்கை கொண்டவனாக மாறி *இந்துஸ்தான் குடியரசு இராணுவ வீரனாக" மாறினான் என்பதை ஒரு பகுதியாகவும் ஒரே நேரத்தில் எழுதிப் போகிறார்.. *ஆங்கிலே...
அழியாச் சுடர்கள் நவீன இலக்கிய சிறிது வெளிச்சம் - கு.ப.ரா அப்பா அவன் துன்பம் தீர்ந்தது என்று ஒருசமயம் தோன்றுகிறது. ஐயோ தெரிந்தே அவளை சாவுக்கிரையாக விட்டு விட்டு வந்தேனே என்று ஒருசமயம் நெஞ்சம் துடிக்கிறது. நான் என்ன செய்ய முடிந்தது. அவள் இடமே கொடுக்கவில்லையே அந்த வீட்டிலிருந்து வெளியே வந்த பிறகு எவ்வளவோ தடவைகள் அங்கே போயும் அவளைப் பார்க்க முடியவில்லை. நேற்று போனேன் அவள் மாரடைப்பால் இறந்துபோய் விட்டாளாம்! மாரடைப்பா அந்த மார்பில் இன்னும் என்னென்ன ரகசியங்கள் மூண்டு அதை அடைத்து விட்டனவோ? அன்றிரவு சிலவற்றைத்தான் வெளியேற்றினாள் போல் இருக்கிறது. போதும், சிறிது வெளிச்சம் போதும்; இனிமேல் திறந்து சொல்ல முடியாது' என்றாள் கடைசியாக. திறந்து சொன்னதே என் உள்ளத்தில் விழுந்துவிடாத வேதனையாகி விட்டது. அது தெரிந்துதான் அவள் நிறுத்திக் கொண்டாள். ஆமாம்! இனிமேல் என்ன சொல்லுகிறேனே; அவள் இட்ட தடை அவளுடன் நீங்கிவிட்டது நான் சென்னையில் சென்ற வருஷம், ஒரு வீட்டு ரேழி உள்ளில் குடியிருந்தேன். உள்ளே ஒரே ஒரு குடித்தனம். புருஷன் பெண்சாதி, உலகத்தில் சொல்லிக்கொள்ளுகிறபடி புருஷனுக்கு எங்கோ ஒரு பாங்கில் வேலை. பகல் முழுவ...