Skip to main content

Posts

பட்டத்து யானை

*வாசிப்பை நேசிப்போம்* *வேல இராமமூர்த்தியின் பட்டத்து யானை* ஊரடங்கு நாளில் உலக புத்தக தினத்திற்கு பிறகு படித்த முதல் நாவல்.ஏற்கெனவே இவர் எழுதிய குற்றப் பரம்பரையை இரண்டு முறை வாசித்ததால் இப்புத்தகமும் இரண்டாம் முறை வாசிக்கப்பட்டது.‌. இராமநாதபுரம் மாவட்டத்தில் பெருநாழி கிராமத்தில் செல்லையா- இருளாயி தம்பதியர் மகனாகப் பிறந்த  இரணசிங்கம் நாவலின் கதாநாயகன்.. கதையாசிரியர் கதையை இருகூறாகப்பிரித்து கதையை சொல்லிக் செல்கிறார். தற்போதைய இரணசிங்கம் அவனுடைய விடுதலை வேள்வி போர்த்திறம் சாதாரண படிப்பறிவில்லாத கிராமத்தின் வாலிபர்களை கும்பினி படையை எதிர்த்து போரிட பயிற்றுவிக்கும் முறை.. எதிரிகள் தாக்கி வீரர்கள் இறந்தால் மனம் தளராது போராடும் திறம், கம்பெனியாரின் காவல்நிலையத்தில் ( கச்சேரி) புகுந்து இராணுவ தளவாடங்கள், துப்பாக்கிகளை கைப்பற்றி இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து சுதந்திர போராட்ட வீரர்களாக மாற்றுவது போராடுவது என ஒரு நிகழ்கால நிகழ்வாகும், எப்படி இது போன்ற சுதந்திர வேட்கை கொண்டவனாக மாறி *இந்துஸ்தான் குடியரசு இராணுவ வீரனாக" மாறினான் என்பதை ஒரு பகுதியாகவும் ஒரே நேரத்தில் எழுதிப் போகிறார்.. *ஆங்கிலே...
Recent posts

சிறிது வெளிச்சம்

அழியாச் சுடர்கள் நவீன இலக்கிய  சிறிது வெளிச்சம் - கு.ப.ரா அப்பா அவன் துன்பம் தீர்ந்தது என்று ஒருசமயம் தோன்றுகிறது. ஐயோ தெரிந்தே அவளை சாவுக்கிரையாக விட்டு விட்டு வந்தேனே என்று ஒருசமயம் நெஞ்சம் துடிக்கிறது. நான் என்ன செய்ய முடிந்தது. அவள் இடமே கொடுக்கவில்லையே அந்த வீட்டிலிருந்து வெளியே வந்த பிறகு எவ்வளவோ தடவைகள் அங்கே போயும் அவளைப் பார்க்க முடியவில்லை. நேற்று போனேன் அவள் மாரடைப்பால் இறந்துபோய் விட்டாளாம்! மாரடைப்பா அந்த மார்பில் இன்னும் என்னென்ன ரகசியங்கள் மூண்டு அதை அடைத்து விட்டனவோ? அன்றிரவு சிலவற்றைத்தான் வெளியேற்றினாள் போல் இருக்கிறது. போதும், சிறிது வெளிச்சம் போதும்; இனிமேல் திறந்து சொல்ல முடியாது' என்றாள் கடைசியாக. திறந்து சொன்னதே என் உள்ளத்தில் விழுந்துவிடாத வேதனையாகி விட்டது. அது தெரிந்துதான் அவள் நிறுத்திக் கொண்டாள். ஆமாம்! இனிமேல் என்ன சொல்லுகிறேனே; அவள் இட்ட தடை அவளுடன் நீங்கிவிட்டது நான் சென்னையில் சென்ற வருஷம், ஒரு வீட்டு ரேழி உள்ளில் குடியிருந்தேன். உள்ளே ஒரே ஒரு குடித்தனம். புருஷன் பெண்சாதி, உலகத்தில் சொல்லிக்கொள்ளுகிறபடி புருஷனுக்கு எங்கோ ஒரு பாங்கில் வேலை. பகல் முழுவ...

விமோசனம்

அசோகமித்திரனின் “விமோசனம்” - சிறுகதை - வாசிப்பனுபவம் - உஷாதீபன்   வெளியீடு=காலச்சுவடுபதிப்பகம். ------------------------------------------------------------------- விமோசனம்....! யாருக்கு விமோசனம்? அவளுக்கா...அவனுக்கா? அவளுக்கு அவனிடமிருந்தா அல்லது அவனுக்கு அவளிடமிருந்தா? அவனிடமிருந்தா அல்லது இந்த வாழ்க்கையிலிருந்தா? எந்த விமோசனமும் அவனுக்குத் தேவையில்லைதான். அந்தச் சொல்லையே, அந்த எண்ணத்தையே மனதில் ஏற்படுத்தியவன் அவன்தான். அவனிடமிருந்து அல்லது அவனுடன் கூடிய அந்த வாழ்க்கையிலிருந்து அல்லது அவனுடன் இணைந்த அந்த இடர்பாடுகளிலிருந்து -  இப்படிப் பலவகையிலும் நினைக்கும் வண்ணமாக அவள் தேடுகிறாளே...அதுவே அவளுக்கான விமோசனம்...! எளிய வாழ்க்கைதான்....கஷ்டம் நிறைந்த, பற்றாக்குறைமிக்க வாழ்க்கைதான். ஆனாலும் அதற்குள் சந்தோஷம் என்பது பரஸ்பரம் நாம் ஏற்படுத்திக் கொள்வதுதானே? சொர்க்கத்தையோ அல்லது நரகத்தையோ உண்டுபண்ணுவது நம் கையில்தானே இருக்கிறது? நம்மைச் சுற்றித்தானே இந்த உலகம்?  வீட்டிற்குள் இருக்கும் இரண்டு உயிர்களுக்குள்ளேயே, அவைகளுக்கு நடுவேயே அன்பும், பிரியமும், கருணையும், நேசமும் விட்...

நதிநீர் இணைப்பு

நதிநீர் இணைப்பு என்னும் கவர்ச்சிகர வாக்குறுதி: சூழியலைப் பாதிக்குமா? தண்ணீர் பற்றாக்குறைக்கு மாற்றா?   இந்து குணசேகர் தண்ணீர்  பற்றாக்குறை மக்களைக் கூடுதலாக  நெருக்கும் போதெல்லாம்  நதிநீர் இணைப்பு பற்றிய குரல்கள் பரவலாக ஒலித்துக் கொண்டிருக்கும். அரசியல் கட்சிகளும் அவ்வப்போது நதிநீர் இணைப்பு குறித்த அறிவிப்பை முன் வைப்பார்கள். வருகின்ற  நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக, அதிமுகவின்  தேர்தல் அறிக்கையில் நதிநீர் இணைப்பு பற்றிய வாக்குறுதிகள் முன்வைக்கப்பட்டுள்ளன. தவறவிடாதீர் பெற்றதும் கற்றதும் 2: குழந்தையின்மைக்கு யார் காரணம்? ’நதிநீர் இணைப்பு’ என்பது இந்தியாவைப் பொறுத்தவரை மக்கள் முன் வைக்கப்படும் கவர்ச்சிகரமான வாக்குறுதி. ’நதிநீர் இணைப்பு’ குறித்த வலியுறுத்தல்கள் எழும்போதெல்லாம்  அதனுடன்  இந்தத் திட்டத்தினால் சூழியல் சார்ந்த சீர்கேடுகளும் உண்டாகுமா என்ற விவாதங்களும் எழுப்பப்படும். சூழல் சார்ந்த பிரச்சினைகள் இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் எதிர் கொண்டுவரும் வேளையில், நதிநீர் இணைப்பு  குறித்த விவாதங்கள்...

ஒரு எதிர்க் கேள்வியின் தத்துவம்

ஒரு எதிர்க் கேள்வியின் தத்துவம்   அம்மா “அவருக்கு உன்னை பார்க்க வேண்டும் போல் இருக்கிறது.” என்று உறவினர் ஒருவர் சொன்னபோது “எனக்கு அவரை பார்க்க வேண்டும் போல் இருக...

இதைத்தான் சர்க்கரை நோய் என்கிறார்கள் !

இதைத்தான் சர்க்கரை நோய் என்கிறார்கள் ! இது மிக நீளமான , மிகவும் பயனுள்ள பதிவு அனைவரும் அலோபதி மயக்கத்தில் முழ்கி இருக்கும் இந்த நாட்டில், நம் மரபு மருத்துவத்தை தேடி ...