மனத்தை ஒருமுகபபடுத்த வழி. மனோ தத்துவத்தில் PHD வாங்கிய திரு சூரியன் அவர்கள் தனது நூலில் குறிப்பிட்டு உள்ள மிக சிறந்த வழிமுறைகளை பார்ப்போம். 1]புத்தகத்தை நாம் அனைவருமே இடது பக்கத்தில் இருந்து வலது பக்கமாக படிப்போம். அவ்வாறு இல்லாமல் வலதிலிருந்து இடது பக்கமாக முதலில் படித்து, பின்னர் இடமிருந்து வலமாக படியுங்கள். 2]அதே போல் முதலில் நீங்கள் தலை கீழாக புத்தகம் படித்து, பின்னர் நேராக படியுங்கள். இவ்வாறு செய்வது, நீங்கள் வேகமாக படிக்கும் திறனை அதிகரிப்பதோடு உங்கள் மனப்பாடம் செய்யும் திறனையும் அதிகரிக்கும். 3] உலகில் பெரும்பாலான மக்கள் வலது கையால் எழுதும் பழக்கம் உடையவர்கள். வலது கையால் எழுதுபவர்கள் இடது கையாலும், இடது கை பழக்கம் உடையவர்கள் வலது கையாலும் எழுதி பழகுங்கள். 4] பின்னர் சிவாஜி த பாஸ் போல் இரண்டு கைகளாலும் எழுதி பழகுங்கள். 5] ஒரே நேரத்தில் வலது கையில் ஒரு வார்த்தையையும், இடது கையில் மற்றொரு வார்த்தையையும் எழுதி பழகுங்கள். வலது கையில் குளிர் என்று எழுதினால், இடது கையில் வெய்யில் என்று எழுதுங்கள். 6] இதே போல் உங்களுக்கு ஏதேனும் புதிய வழிமுறை தோன்றினாலும் செய்யலாம். நமது தன்னம்...